விருதுநகர், நவ.7- சோசலிசத்தின் மேன்மைகளை உலகிற்கு பறைசாற்றியது ரஷ்யப் புரட்சியாகும். உலகத்தில் முதல் முறையாக தொழிலாளி வர்க்கம் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்த தினம் நவம்பர் 7 ஆகும். இந்நாளை உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் புரட்சி தினமாக கொண்டாடி வருகின்றன. தமிழகம் உட்பட இந்தியாவிலும் நவம்பர் புரட்சிதினம் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. திருவில்லி புத்தூரில் சிபிஎம் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜு னன் கொடியேற்றினார். மாவட்டம் முமுவதும் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.
மதுரை மாநகர்
மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் சார்பில் கொடியேற்றி கொண்டா டப்பட்டது. மதுரை மாவட்டக்குழு அலுவல கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் செங்கொடி யினை ஏற்றி வைத்தார் . மாவட்ட செயலாளர் மா. கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கார்க்கி படிப்பகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாமன்ற உறுப்பி னர் வை. ஜென்னியம்மாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 49 ஆவது வார்டு நெல்பேட்டை பகுதியில் மாவட்ட செயலாளர் மா. கணேசன் கொடியேற்றினார். இந்நிகழ்ச்சிகளில் மாநகர துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் மற்றும் பலர் பங்கேற்றனர். 105க்கும் மேற்பட்ட மையங்களில் கொடியேற்றப்பட்டது.
மதுரை புறநகர்
மதுரை புறநகர் மாவட்டத்தில் கட்சி அலுவலகங்கள் மற்றும் கிரா மங்களில் உள்ள கட்சி கிளைகள் சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றப்பட்டது. செல்லம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் கொடியேற்றினார். இந்நிகழ்ச்சி களில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாமன்ற உறுப்பி னர் என்.விஜயா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் வி காசிநாத துரை கொடியேற்றினார். இராமேஸ்வரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. சிவகங்கை சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் மாவட்ட செயலாளர் வி.கருப்புச்சாமி கொடியேற்றி பேசினார். பல்வேறு கிளைகளில் புரட்சிதினம் கொண்டாடப்பட்டது. தீக்கதிர் அலுவலகம் மதுரை தீக்கதிர் அலுவல கத்தில் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் கொடியேற்றினார். மூத்த தலைவர் வி.பரமேசுவரன் உரை யாற்றினார்.இடைக்கமிட்டிச் செய லாளர் ஜோ.ராஜ்மோகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.